குளிர் முற்றத்தில்
உன்
ஞாபக வாசணையை பரப்பியிருக்கிறேன்
என் காதுகள் உணராத
நீ மலர்ந்த
வாசணை
விரல்களுக்குள் நிரப்பி
கவிதை எழுதுகிறேன்
முற்றத்து மண்
வாசணையின் நிறமாகிறது
மின்மினிகள் தாழப்பறந்து
நீ விட்டுப்போன
உயிர் மீது
மின்சார முட்டையிடுகின்றன
நேற்றிரவு கனவில்
என்-
முற்றத்து மணற் பரப்பில்
புற்று நோய்க் கட்டிகள்
சரி, பிழைக்குள்
அடங்காத - என்
ஆசைகளின் சந்நிதானத்துக்கு
நீ-
ஞாபக வாசணையோடு
மின்சார முட்டைகளோடு
புற்று நோய்க்கட்டிகளோடு
அடிக்கடிவந்து போகிறாய்!
உன் ஞாபகங்களை
இரமாணித்து
உறங்க வைப்பதற்குள்
இரவுவிடிந்து போகிறது!
may 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment