Monday, January 15, 2007

என் மகனுக்குப் பல் முளைத்து வளர்கிறது

குளிர் முற்றத்தில்
உன்
ஞாபக வாசணையை பரப்பியிருக்கிறேன்

என் காதுகள் உணராத
நீ மலர்ந்த
வாசணை

விரல்களுக்குள் நிரப்பி
கவிதை எழுதுகிறேன்

முற்றத்து மண்
வாசணையின் நிறமாகிறது

மின்மினிகள் தாழப்பறந்து
நீ விட்டுப்போன
உயிர் மீது
மின்சார முட்டையிடுகின்றன

நேற்றிரவு கனவில்
என்-
முற்றத்து மணற் பரப்பில்
புற்று நோய்க் கட்டிகள்

சரி, பிழைக்குள்
அடங்காத - என்
ஆசைகளின் சந்நிதானத்துக்கு
நீ-
ஞாபக வாசணையோடு
மின்சார முட்டைகளோடு
புற்று நோய்க்கட்டிகளோடு
அடிக்கடிவந்து போகிறாய்!

உன் ஞாபகங்களை
இரமாணித்து
உறங்க வைப்பதற்குள்
இரவுவிடிந்து போகிறது!

may 2004

No comments: