Monday, January 15, 2007

நான் சிறுவனாயிருந்த போது ஒரு கனவு

ஒரு-
வெள்ளைப் பேய்
சிறகு முளைத்துப் பறப்பதாயும்
நீண்ட பற்கள்,
உருண்டைக் கண்கள்
பயமுறுத்தவதாயும்
பிரமை எனக்குள்

பாரிச வாத நோயாளியாய்
இழுபட்டு இழுபட்டு
இம்சைப்பட்ட தூக்கங்கள்

இன்னும்-
அந்த இரவின்
எச்ச சொச்சங்கள்
என்-
தகைப்பு அடங்கி விடவில்லை
அவர்கள்நீர் தெளித்த பின்னும்

நான் கேட்டதில்லை
கொஞ்சம் தண்ணீர்
தெளித்த பிறகு
மறுக்கமனம் வரவில்லை

அது-
காட்டுப் பேயாக
நான்
காட்டுக்குள் இருப்பதாயும்
என்னைச் சுற்றிபேய்க் குஞ்சுகள்

கொஞ்சம் சந்தோசமாய்
இருந்தது-
கத்திக் கதறிக்
கண்விழித்து
கனவென்றான பின்

ஓடிப்போய்
ஒளிந்து கொண்டது
தூக்கம்-
வீட்டு மூலைக்குள்
விடியுமட்டும்
வந்து விழாமல்

என்-
அறைக்கதவும்
ஒற்றை ஜன்னலும்
தட்டப் படுகிறது
எனக்கு
பயமாக இருக்கிறது

கூசாவில் தண்ணீரில்லை
என் புத்தகங்களில்
பேய்க் கதைகள்
பிசாசுக் கதைகள்

சரி, பிழைதெரியாத
என்னை
தனியறையில் போட்டது
யார் குற்றம்?
அதுவும்-சகுனம் பார்த்து !

feb 2002

2 comments:

amna said...

Hi i am fawzar(from Dubai),
Now I dont have time to read online thatsway i am copying to read in my room. definitly i know your think is very different pure.
Anyhow i wish to become a millionor....
If you have time come to my room. Thanks for giving information from your heart for such as online persons...

Shangaran said...

nice nalla irrukku.
keep it up.

shangaran.
http://shangaran.wordpress.com